என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
2 குழந்தைகளின் தாய் தற்கொலை
2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 27). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.
நாகலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகலட்சுமி உயிரிழந்தார்.
இந்தநிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் தந்தை விராலிமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 27). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.
நாகலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகலட்சுமி உயிரிழந்தார்.
இந்தநிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் தந்தை விராலிமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






