என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரியில் கிரானைட் கல் கடத்திச்சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கனிமவள உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் ஜெகதேவி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த டாரஸ் லாரியை சோதனை செய்தபோது அதில் 5 கிரானைட் கல்லை கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரி பொன்னுமணி பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






