என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மின் மோட்டார் வயர்கள் திருடியவர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே மின் மோட்டா வயர்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    பேரிகை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது60) விவசாயி. இவர் தனது விவசாய நிலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அங்கிருந்த கிணற்றில் இருந்து மோட்டார் மற்றும் மின்சார வயரை மர்ம நபர்கள் இரண்டு பேர் திருடி கொண்டிருந்தனர். இதை கவனித்த நாகராஜ் அவர்களை பிடிக்க முயன்றார். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட நபரை பேரிகை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பேரிகை அருகே உள்ள உளியாளம் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் (32) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×