என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சியில் 23 வார்டுகளின் முடிவு நிலவரம்
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்துவருகிறது.
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவின் பூட்டு சாவி தொலைந்து போனதால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் முன்பாக ஆக்சாபிளேடு மூலம் பூட்டை அறுத்து திறந்தனர். இதனால் காலை 8.50 மணிக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 23 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
வார்டு-1 செல்வ புஷ்பலதா (வி.சி.க.).
வார்டு-2 கீதா குணசேகரன் (தி.மு.க.).
வார்டு-3 பிரகாஷ் (தி.மு.க.).
வார்டு-4 சரிதா (வி.சி.க.).
வார்டு-5 பார்வதி (தி.மு.க.).
வார்டு-6 ஹேமலதா (தி.மு.க.).
வார்டு-7 சங்கீதா (தி.மு.க.).
வார்டு-8 சுமதி (தி.மு.க.).
வார்டு-9 சுரேஷ்பாபு (அ.தி.மு.க.).
வார்டு-10 ராஜ்மோகன் (தி.மு.க.).
வார்டு-11 அருண்பாபு (த.வா.க.).
வார்டு-12 பிரசன்னா (தி.மு.க.).
வார்டு-13 நடராஜன் (தி.மு.க.).
வார்டு-14 கண்ணன் (த.வா.க.).
வார்டு-15 மகேஷ்வரி (தி.மு.க.).
வார்டு-16 ஆராவமுது (தி.மு.க.).
வார்டு-17 கிரேசி (தி.மு.க.).
வார்டு-18 சுதா (தி.மு.க.).
வார்டு-19 செந்தில்குமாரி (தி.மு.க.).
வார்டு-20 சுந்தரிராஜா (தி.மு.க.).
வார்டு-21 மணிமாறன் (அ.தி.மு.க.).
வார்டு-22 சுபாஷினி (தி.மு.க.).
வார்டு-23 தஷ்ணா (அ.தி.மு.க.).
இதுவரை வெளியான 23 வார்டுகளின் முடிவில் தி.மு.க. கூட்டணி 20 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.