என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்த காட்சி.
    X
    டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்த காட்சி.

    செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நவீன வசதிகளுடன் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை

    செங்கோட்டை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மருத்துவர்களால் நவீன வசதியுடன் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மருத்துவர்களால் நவீன வசதியுடன் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

    தொண்டையில் சதை, மூக்கில் கட்டி, மூக்கு எலும்பு வளைவு, காது ஓட்டை மற்றும் நுண்ணிய அறுவை சிகிச்சைகளும் இங்கு இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

    செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டு அதற்கு இலவசமாக காது கேட்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது‌. இந்த அறுவை சிகிச்சை வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி காது, மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனையை நாடுமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×