search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானகொள்ளை திருவிழா

    புதுவை சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி வருகிற 7-ந் தேதி மயான கொள்ளை விழா நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுவை சின்ன பிள்ளை வீதியில் உள்ள  அங்காளபரமேஸ்வரி கோவிலில் 45-ம் வருட பிரம்மோற்சவ விழா வருகிற  1-ந் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.

    இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து நாள்தோறும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. 7-ந் தேதி 6.30 மணிக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தேர் புறப்பாடும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நரிமேடு மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடக்கிறது 

    இதையடுத்து 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தினமும் 6.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

     மறுநாள் 16-ந் தேதி காலை 6.30 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணியளவில் வேதபுரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.

    17-ந் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும் மாலை 6 மணிக்கு உற்சவ அலங்காரம் தீபாராதனை நடைபெறும். 18-ந் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் 19-ந் தேதி மாலை 4.30 மணி அளவில் மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. 20-ந் தேதி இரவு  பாவாடைராயன் சுவாமி பள்ளயத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×