என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பேரிகார்டு மீது பைக் மோதி வாலிபர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேரிகார்டு மீது பைக் மோதியதில் வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி:
ஆந்திரமாநிலம், சித்தூர் அடுத்துள்ள குப்பம் பந்தலனகா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது26). இவர் நேற்று ஓசூரில் இருந்து பெங்களூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஓசூர் சிப்காட் ஆர்.டி.ஒ. அலுவலகம் முன்பு உள்ள பேரிகார்டு மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






