என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆனைமலையில் வியாபாரி கொலையில் பெண்கள் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்21 Feb 2022 9:26 AM GMT (Updated: 21 Feb 2022 9:26 AM GMT)
தண்ணீர் பிடிப்பது தொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை சரவணன் டாக்டர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருடைய மகன் பரமேஸ்வரன்(வயது27). ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பகுதியில் தேங்காய் பழம் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் பரமேஸ்வரின் பாட்டி ரங்கநாயகிக்கும், அங்கு வசித்து வரக் கூடிய அகல்யா என்பவரின் வீட்டிற்கு ஒரே குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடை யே அவ்வப்போது, தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று மீண்டும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரங்கநாயகிக்கு ஆதரவாக பரமேஸ்வரன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகல்யா வீட்டிற்கு சென்று தனது கணவர் தமிழ்செல்வனிடம் கூறினார்.
இதையடுத்து தமிழ்செல்வன், அவரது மனைவி அகல்யா, தயார் பானுமதி, சகோதரர் ராகேவந்திரன் ஆகியோருடன் வந்து ரங்கநாயகி மற்றும் பரமேஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து பரமேஸ்வரனை தாக்கி கீழே தள்ளினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தலைமறைவான 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் ஆனைமலை பகுதியிலேயே உறவினர்கள் வீடுகளில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த தமிழ்செல்வன், அகல்யா, பானுமதி, ராகவேந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இந்த சம்பவத்தில் வேறு ஏதாவது காரணம் உள்ளது. வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X