என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்.
சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் திடீர் தர்ணா
சீர்காழி காமிராக்களின் எல்.இ.டி திரை இயங்கவில்லை என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, சுயேட்சை வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது.24 வார்டுகளில் அமைக்கப்பட்டிருந்த 36 வாக்கு சாவடிகளில் பதிவான 36 வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளிக்கு சனிக்கிழமை நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும் அப்பகுதி முழுவதும் 31 கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து நான்கு அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவு வாயிலில் உள்ள சில காமிராக்களின் பதிவு அங்கு வெளியே வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் ஓடவில்லையாம்.
இதனை பார்வையிட்டு அறிந்த தேமுதிக வேட்பாளர் ராஜசேகர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் விவரம் கேட்டார். இந்த தகவல் வேகமாக பரவியது.
இதனையறிந்த அதிமுக, பாமக, சுயேட்சை வேட்பாளர், பாஜக வேட்பாளர்கள், பாமக நகர செயலாளர் சின்னையன், மற்றும் 50&க்கும் மேற்பட்டவர்கள் வாக்குஎண்ணும் மையத்தில் திரண்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல்அறிந்த சீர்காழி டி.எஸ்.பி லாமெக், தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம், வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு சிலரை அழைத்து கண்காணிப்பு காமிராக்கள் அனைத்து செயல்பாட்டின்
பதிவு திரை உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டதிலிருந்து பதிவான சிசிடிவி பதிவுகளை திரையில் ஓடவிட்டு ஓளிபரப்ப செய்து எந்த தவறும் நடைபெறவில்லை எனவும், நான்கு அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என விளக்கினர்.
பக்கவாட்டு நுழைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 காமிராக் களின் பதிவுகள் மட்டும் வெளிப்புறம் அமைக்கப் பட்டுள்ள எல்இடி திரையில் தெரியவில்லை.
அதற்கு பவர் சப்ளை பிரச்சனையால் திரையில் தெரியவில்லை எனவும், ஆனால் காமிரா பதிவுகள் ஹார்ட் டிஸ்கில் பதிவாகியுள்ளது என விவரம் கூறப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






