என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடலூர் அருகே வி‌ஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

    கடலூரில் வயது மூப்பு காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் மனமுடைந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் அருகே நடுவர் பேட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வள்ளி. (வயது 75). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி வள்ளி தனது கணவர் பெருமாளுடன் வசித்துவந்தார். தற்போது வயது மூப்பு காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் மூதாட்டி வள்ளி மனமுடைந்த நிலையில் நேற்று வி‌ஷம்குடித்தார்.

    இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக அவர்களது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×