search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வெடி மருந்துகள் பறிமுதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கிடந்த வெடி மருந்துகள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த ஆஞ்சிபாலு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு வெடிமருந்துகள் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது 9 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவர், தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வெடிமருந்துகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ¢அப்பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை உடைக்க மர்ம நபர்கள் வெடிமருந்து பொருட்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தளி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×