என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் 61.11சதவீத வாக்குப்பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் 61.11 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய 10பேரூராட்சிகளில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
நகராட்சி பகுதிகளில் 123 வார்டுகளிலும், போளூரில் ஒரு வார்டில் மட்டும் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்று உள்ளதால் அதை தவிர்த்து 149 வார்டுகளுக்கும் என மொத்தம் 272 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
143 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள்வெப்கேமரா மூலம் இணையதள வாயிலாக தொடர்ந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குசாவடி மையங்களில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
திருவண்ணாமலை நகராட்சியில் 61.11சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாவட்டம் முழுவதும் 73.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






