என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திய மண்டலத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்20 Feb 2022 7:58 AM GMT (Updated: 20 Feb 2022 7:58 AM GMT)
மத்திய மண்டலத்தில் தேர்தல் சூறாவளியால் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாக குறைந்தது.
திருச்சி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் தினசரி கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் வைரஸ் தொற்று மேலும் பரவக்கூடும் என அச்சம் எழுந்தது.
ஆளுங்கட்சியினரை பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். தேர்தலுக்காக பள்ளி, கல்லூரிகள் திறக்கப் படுகின்றன. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் விமர்சித்தனர்.ஆனால் தேர்தல் வெப்பக் காற்றை எதிர்கொள்ள முடியாமல் ஒமிக்ரான், கொரோனா வைரஸ்கள் ஓடி ஒளிந்து கொண்டதாக வேடிக்கையாக சொல்கிறார்கள். தேர்தல் சூறாவளியில் ஒமிக்ரான் கொரோனா சுருண்டு விட்டது.
இந்த சூழலில் கொரோனா கட்டுக்குள் வந்ததை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். மருத்துவ வல்லுநர்களின் கணிப்பு பொய்க்கவில்லை. திருச்சி உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் நேற்றைய தினம் 98 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
நேற்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக திருச்சியில் 34 பேருக்கும், 2வதாக தஞ்சாவூரில் 19 பேருக்கும், திருவாரூ ரில் 12 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதியானது.
மேலும் கரூர் மாவட்டத் தில் 9 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், அரிய லூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தலா 3 பேருக்கும், மயிலாடுதுறையில் ஒருத்தருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
100&க்கு கீழ் தொற்று சரிந்துள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்த கட்சியினர், பொது மக்கள், வாக்காள பெருமக்கள் அனைவரும் தப்பித்து கொண்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் தினசரி கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் வைரஸ் தொற்று மேலும் பரவக்கூடும் என அச்சம் எழுந்தது.
ஆளுங்கட்சியினரை பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். தேர்தலுக்காக பள்ளி, கல்லூரிகள் திறக்கப் படுகின்றன. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் விமர்சித்தனர்.ஆனால் தேர்தல் வெப்பக் காற்றை எதிர்கொள்ள முடியாமல் ஒமிக்ரான், கொரோனா வைரஸ்கள் ஓடி ஒளிந்து கொண்டதாக வேடிக்கையாக சொல்கிறார்கள். தேர்தல் சூறாவளியில் ஒமிக்ரான் கொரோனா சுருண்டு விட்டது.
இந்த சூழலில் கொரோனா கட்டுக்குள் வந்ததை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். மருத்துவ வல்லுநர்களின் கணிப்பு பொய்க்கவில்லை. திருச்சி உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் நேற்றைய தினம் 98 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
நேற்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக திருச்சியில் 34 பேருக்கும், 2வதாக தஞ்சாவூரில் 19 பேருக்கும், திருவாரூ ரில் 12 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதியானது.
மேலும் கரூர் மாவட்டத் தில் 9 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், அரிய லூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தலா 3 பேருக்கும், மயிலாடுதுறையில் ஒருத்தருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
100&க்கு கீழ் தொற்று சரிந்துள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்த கட்சியினர், பொது மக்கள், வாக்காள பெருமக்கள் அனைவரும் தப்பித்து கொண்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X