என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடி முன்பு தே.மு.தி.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    X
    வாக்குச்சாவடி முன்பு தே.மு.தி.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க.-தே.மு.தி.க.வினர் மோதல்

    சிவகாசி நகராட்சி தேர்தலில் தி.மு.க.-தே.மு.தி.க.வினர் மோதிக்கொண்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக் கப்பட்டு முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியதும் அனைத்து வார்டு களிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
    சிவகாசி 26&வது வார்டுக் குட்பட்ட வாக்குச் சாவடி ரத்தின விலாஸ் பள்ளிக் கூடத்தில் அமைக்கப்பட்டி ருந்தது.  அங்கு இன்று காலை வாக்காளர்கள் வாக்களிக்க வந்த போது, தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடி அருகே நின்று கொண்டு ஆதரவு திரட்டி னர். 

    அப்போது தே.மு.தி.க. ஆதரவாளர் ஒருவரை தி.மு.க.வினர் கீழே தள்ளி விட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தே.மு.தி.க. வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வேலாயுதம் ரஸ்தா பகுதியில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் போலீசார் அங்கு சென்று தே.மு.தி.க.வினரை சமரசம் செய்தனர்.

    மேலும் பதட்டம் ஏற்படா மல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவில் பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×