என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட காத்திருந்த பெண்கள்.
    X
    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட காத்திருந்த பெண்கள்.

    திருவண்ணாமலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பான ஓட்டு பதிவு

    திருவண்ணாமலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்  இன்று நடைபெற்று வருகிறது. 

    திருவண்ணாமலை நகராட்சி 39 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. இதில் 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை யில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் நகராட்சி பெண்கள் பள்ளி வாக்குச் சாவடி உள்ளிட்ட பல வாக்குச்சாவடி களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

    ஆண், பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

    அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக்கையுறை வழங்கப்படுகிறது. 

    மேலும் ஸ்கேனர் பரிசோதனை செய்து கைகளைக் கிருமி நாசினியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் சமூக இடைவெளியை மட்டும் யாரும் கடை பிடித்ததாக தெரியவில்லை. 

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இருந்தனர் .அவர்கள் யாரும் கள்ள ஓட்டு போட முயற்சி செய்கிறீர்களா? என்று கண்காணித்து வருகின்றனர். 

    இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை நகராட்சிக்கு உடபட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    சில வேட்பாளர்கள் முதலிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்து விட்டனர். சிலர் தங்களது வாக்குகளை கடைசியில் பதிவு செய்யக் காத்திருந்தனர்.
    Next Story
    ×