search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு
    X
    வாக்குப்பதிவு

    விருத்தாசலம் நகராட்சியில் எந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

    விருத்தாசலம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவரும் சூழலில் 4 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி பகுதியிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விருத்தாசலம் நகராட்சியில் மொத்தமுள்ள 38 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்பட 143 பேர் போட்டியில் உள்ளனர். இன்று வாக்குப்பதிவுக்கென 68 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விருத்தாசலம் நகராட்சியில் மொத்தம் 60 ஆயிரத்து 202 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 537 பேர், பெண் வாக்காளர்கள் 30 ஆயிரத்து 720 பேர், திருநங்கைகள் 15 பேர். விருத்தாசலம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவரும் சூழலில் 4 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
    Next Story
    ×