search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் புறக்கணிப்பு (கோப்பு படம்)
    X
    தேர்தல் புறக்கணிப்பு (கோப்பு படம்)

    வார்டு மறுவரையறை குழப்பம்- கானாடுகாத்தான் பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு

    கானாடுகாத்தான் பேரூராட்சியில் 3, 5 வார்டுகளிலும் உள்ள குழப்பத்தால் பாலையூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் அதிகாரிகள் வார்டுகளை மறுவரையறை செய்ததில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வார்டு தனித்தனியாக ஒதுக்கப்பட்டதால் குழப்பம் நிலவி வருகிறது.

    குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு ஒருவருக்கு 3-வது வார்டு இன்னொருவருக்கு 4-வது வார்டு இன்னொருவருக்கு 6-வது வார்டு என ஒதுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக கானாடுகாத்தான் பேரூராட்சியில் 3, 5 வார்டுகளிலும் உள்ள குழப்பத்தால் பாலையூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.

    காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. பழையூர் பகுதியில் ஏற்கனவே 1, 2 என 2 வார்டுகள் இருந்தன.ஆனால் அதிகாரிகள் சமீபத்தில் வார்டுகளை மறுவரையறை செய்தபோது 2-வது வார்டை 2-ஆக பிரித்து 3, 5-வது வார்டுகளில் சேர்த்தனர். இதையடுத்து பழையூர் பகுதி மக்கள் வார்டை ஏற்கனவே இருந்தபடி சீரமைத்து தர வேண்டும் இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக போவதாக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    நடவடிக்கை இல்லாத நிலையில் பழையூர் பகுதியைச் சேர்ந்த பழைய 2-வது வார்டு மக்கள் திடீரென தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தற்போது பாலையூர் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால், அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×