என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டுப்பதிவு எந்திரம்
    X
    ஓட்டுப்பதிவு எந்திரம்

    761 வாக்குச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு

    விருதுநகரில் 761 வாக்குச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பதால் பதட்டமான 103 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
    விருதுநகர்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை,  திருத்தங்கல் ஆகிய 5  நகராட்சிகளுக்கும், சேத்தூர், வத்திராயிருப்பு, செட்டியார்பட்டி, காரியாபட்டி, மம்சாபுரம், சுந்தரபாண்டியபுரம், மல்லாங்கிணறு, தென்கோடிகுளம், வ.புதுப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுகிறது. 

    ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 363 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வார்டுகளில் மொத்தம் 1,613 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் 357பேரும், தி.மு.க. சார்பில் 293பேரும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் 161 பேரும், நாம்தமிழர் கட்சி சார்பில் 113பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 34பேரும், தே.மு.தி.க. சார்பில் 34பேரும், போட்டியிடுகின்றனர்.

    அவர்களைத்தவிர வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நாளில் இருந்தே பிரதான கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தங்களின் வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது.இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. 

    வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலெக்டர் தலை மையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 363 வார்டுகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 761 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுமக்கள் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களித்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச் சாவடிகளாக கண்ட றியப்பட்டுள்ள 103வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார்  பணியமர்த் தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவை  வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

    மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் இன்று முதல் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இந்நிலையில் வாக்கு பதிவிற்காக  பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள்  வாக்குச்சாவடிகளுக்கு இன்று பலத்த போலீஸ் பாது காப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக் கப்பட்டன. அவற்றை வாக்குச்சாவடிகளில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். 

    வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக தீர்வுகாணும் வகையில் கூடுதல் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
    Next Story
    ×