என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் அதிரடி சோதனை
    X
    நீலகிரியில் அதிரடி சோதனை

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நீலகிரியில் அதிரடி சோதனை

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து கள ஆய்வு மேற்கொண்டதில் ரூ.16,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி  மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரி யம் சார்பில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 2019ம் ஆண்டு முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள்,  முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. 

    இதைதொடர்ந்து கடந்த 16ந்தேதி வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி நகராட்சி பகுதியில் ஓட்டல்கள், பேக்கரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 1.850 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து ரூ.3,200 அபராதமும், ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் 1,200 கிலோ பறிமுதல் செய்யப் பட்டு ரூ.2,300 அபராதமும், பேரூராட்சி பகுதியில் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,200 அபராதமும் விதிக்கப்பட்டது.

    மேலும் குன்னூர் ஊராட்சிப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.500&ம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.500&ம், கூடலூர் ஊராட்சி பகுதியில் 400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.900 அபராதமும் விதிக்கப்பட்டது.

    17ந்தேதி ஊட்டி நகராட் சிக்குட்பட்ட மார்கெட், அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 4 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக ரூ.6,200 வசூலிக்கப்பட்டது. 

    இதன் மூலம் 16, 17ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாடு குறித்து கள ஆய்வு மேற்கொண்டதில் ரூ.16,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×