என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் பறிமுதல்
திட்டக்குடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்
திட்டக்குடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி:
திட்டக்குடியில் பறக்கும் படையினர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ராமநத்தம்- திட்டக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் திட்டக்குடி எம்எல்ஏ அலுவலகம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் அரியலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, ஆதனகுறிச்சி கிராமத்தைச்சேர்ந்த உமா (வயது35) என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் எடுத்து சென்றார். இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Next Story






