என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.டி.ஓ ஆய்வு
    X
    ஆர்.டி.ஓ ஆய்வு

    வாக்கு சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் 81 கேமராக்கள் அமைப்

    சீர்காழி நகராட்சி வாக்கு சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் 81 கேமராக்கள் அமைக்கப்பட்டதை ஆர்.டி.ஓ ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14,340,பெண் வாக்காளர்கள் 15,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகள் 36 அமைக்கப்பட்டுள்ளன இதில் 15 வார்டுகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    வரும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில்24 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மையத்தில் சீர்காழிநகராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் ஆர்டிஓ நாராயணன் பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். 

    மேலும் 36 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நலன் கருதி 36 கேமராகளும் வாக்கு என்ணும் மையத்தில் 45 கேமராக்களும் மொத்தம் 81 ஒரு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன பதட்டமான 15 வாக்கு சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×