என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி இளம்பெண் விஷம்குடித்து தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிருஷ்ணகிரி இளம்பெண் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் கொல்ல கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி தனலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள்ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் தனலட்சுமி வேதனையில் இருந்து வந்தார். தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த சில நாட்களாக மனவிரக்திலும், குழந்தை ஏக்கத்திலும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனலட்சுமி, விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






