என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
பண்ருட்டியில் நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளை கும்பல்
பண்ருட்டியில் கொள்ளையர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டு வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் எல்.என்.புரம் முத்தையா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). லாரி அதிபர். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு படுக்க சென்றார்.
காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பின் சக்கரம் காணாமல் போய் இருந்தது.
இதுகுறித்து செல்வம் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தார் யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் திருட வந்தவன் மோட்டார் சைக்கிளை திருட முடியாமல் சக்கரத்தை மட்டும் கழட்டி சென்றது விநோதமாக தெரிந்தது.
இதேபோல அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் ஜன்னலில் அமைக்கப்பட்டிருந்த கொசு வலையை கிழித்தெறிந்து அங்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள் சக்கரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்
இதுபோன்று கொள்ளையர்கள் நூதன முறையில் திருடி வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் எல்.என்.புரம் முத்தையா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). லாரி அதிபர். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு படுக்க சென்றார்.
காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பின் சக்கரம் காணாமல் போய் இருந்தது.
இதுகுறித்து செல்வம் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தார் யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் திருட வந்தவன் மோட்டார் சைக்கிளை திருட முடியாமல் சக்கரத்தை மட்டும் கழட்டி சென்றது விநோதமாக தெரிந்தது.
இதேபோல அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் ஜன்னலில் அமைக்கப்பட்டிருந்த கொசு வலையை கிழித்தெறிந்து அங்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள் சக்கரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்
இதுபோன்று கொள்ளையர்கள் நூதன முறையில் திருடி வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






