என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் ஆலையை மூடுவதை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ மொபைல் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் 135 நிரந்தர தொழிலாளர்கள், 400 தற்காலிக தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆலை தொழி லாளர் சங்கம் சார்பில் 2020-ல் புதிய ஊதிய ஒப்பந்த கோரிக்கை அளிக்கப்பட்டது. இதனால் ஆலையை மூடும் நடவடிக்கையை நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதை கண்டித்தும், தொழிற்சாலை மூடல் உத்தரவை திரும்பப்பெற வலியறுத்தியும் தொழிலாளர் துறையும், முதல்-அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஹரிபாபு, பொருளாளர் கல்பனா உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






