என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
2 கடைகளின் மேற்கூரையை உடைத்து நள்ளிரவில் ரூ.20 ஆயிரம் திருட்டு
பெருந்துறை அருகே 2 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை- வெள்ளோடு ரோட்டில் அய்யர் குளம் அருகே,டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து நடத்தி வருபவர் கோகுல்ராஜ்(30).இவரது கடையை அடுத்து,பேஷன் ஸ்டோர் வைத்து நடத்தி வருபவர் ராஜா(42).சம்பவம் நடந்த 14 ந்தேதி இரவு,இவர்கள் இருவரும் கடை வியாபாரத்தை முடிந்து,கடைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை வழக்கம் போல இருவரும் கடைகளை திறந்து பார்த்தபோது,இருவரின் கடைகளின் மேற்கூரை தகர சீட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.தொடர்ந்து, கடைக்குள் இருந்த கல்லா பெட்டிகளும் திறந்து இருந்தன. அதில்,கோகுல்ராஜ் கடை கல்லாவிலிருந்து ரூ.12 ஆயிரமும், ராஜா கடை கல்லாவிலிருந்து ரூ.8 ஆயிரத்து 500 ம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கோகுல்ராஜ் மற்றும் ராஜா ஆகிய இருவரும் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். மேற்படி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப் பதிவு செய்து,திருடனை தேடி வருகிறார்.
Next Story






