என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
மொபட் மரத்தில் மோதி 2 தொழிலாளிகள் பலி
கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மொபட் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்கவர் முருகன் (42). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளிகள்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் லட்சுமணனும், முருகனும் வேலை விஷயமாக மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி& ரா£யக்கோட்டை சாலையில் கூவத்தி கோவிந்தன் கொட்டாய் என்ற இடத்தில் சென்ற போது திடீரென மொபட் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் லட்சுமணன், முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து கேள்விப்பட்டதும் கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான லட்சுமணன், முருகன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் மொபட் மோதி 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






