என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியை, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை யொட்டி, தன்னார்வ அமைப்புகளின் சார்பில், ஓசூரில் நேற்று வாக்காளர் விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது.
ஓசூரில், பாகலூர் ரோடு மேம்பாலம் அருகே இந்த விழிப்புணர்வு பேரணியை, மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் ஓசூர் அரசு ஐ.டி ஐ. என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஆசிரியர்கள் சிவலிங்கம், சரவணன், வெங்கடேசன் மற்றும் சமூக சேவகர் ராதா, தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கடந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது, ஓசூர் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. முன்னதாக, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
முடிவில் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
Next Story






