என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்த விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள பாவக்கல் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது பார்த்திபன் (வயது47) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






