என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,586 ஆக குறைந்தது

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதிலிருந்து 20 நாட்கள் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.

    பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத் தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட் களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 100-க்கு கீழ் சென்றது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இது வரை கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 128ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் பாதிப்பில் இருந்து 256 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 810 ஆக உயர்ந் துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 732 பேர் உயிரிழந்து உள்ள னர்.தற்போது மாவட்டம் முழுவதும் 1,586 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×