search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆலோசனைக் கூட்டம்
    X
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆலோசனைக் கூட்டம்

    குடியாத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை

    குடியாத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடந்தது.
    குடியாத்தம்:

    வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறையினருக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது காவல்துறையினர் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் அவர்களுக் கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, நிர்மலா, ராஜன்பாபு, செந்தில்குமாரி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் போது ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அனைவரும் சுறுசுறுப் பாகவும் புத்துணர்ச்சியுடனும் விருப்பு வெறுப்பு இன்றி பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் பணியில் உறுதியாகவும், சாந்தமாகவும் இருக்க வேண்டும்.

    வாக்குப்பதிவின் போது யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ செயல்படக் கூடாது. தேர்தல் பணியில் எவரும் வாக்கு பதிவு முறையை ரகசியங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய செயலாகும்.

    வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிக்க அனுமதிக்கக்கூடாது, எவ்வித சுவரொட்டிகள் சின்னங்களோ அல்லது வேட்பாளர்கள் அலுவலகங்களோ மேற்குறிப் பிட்ட எல்லைக்குள் இருக்கக்கூடாது வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் எந்த தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி கூடாது.

    வாக்காளர்களை வாக்குப் பதிவு செய்ய ஊர்திகளில் அழைத்து வர அனுமதிக்கக் கூடாது.
    காவல்துறை அதிகாரிகளும், காவலர் களும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அழைக்காமல் வாக்குச்சாவடிக்கு உள்ளே நுழையக் கூடாது.

    வாக்குப்பதிவு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் கவனத்துடன் திறமையுடன் பெட்டிகளுக்கு சேதம் ஏற்படாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    பணியில் இருக்கும் காவலர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருப்பதுடன் வாக்குச் சாவடிக்குள் பிரவேசிக்கும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டன 

    மேலும் பல்வேறு ஆலோசனைகளும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் இக் கூட்டத்தில் விரிவாக வழங்கப்பட்டது இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸ்£ர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×