என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் இந்தி, உருது மொழிகளில் பிரசாரம்

    வேலூர் மாநகராட்சியில் இந்தி, உருது மொழிகளில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். 

    இது ஒருபுறமிருக்க ஆட்டோ பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். வேலூர் கஸ்பா பகுதிகளில் இந்தி மற்றும் உருது மொழிகளில் பிரசாரம் செய்கின்றனர். 

    இதற்காக இந்தி உருது பேச தெரிந்தவர்கள் மூலம் ஒலிபெருக்கியில் பிரசாரத்தில் ஈடுபட் டுள்ளனர்.

    மாநகராட்சியின் சில பகுதிகளில் இந்தி உருது தெரிந்தவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். 

    அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்தி மற்றும் உருது மொழிகளில் பிரசாரம் செய்வதாக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×