என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வேலூர்கொணவட்டம் அரசு பள்ளியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி இன்று ஆய்வு செய்தார் வேலூர்கொணவட்டம் அரசு பள்ளியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி இன்று ஆய்வு செய்தார்](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202161420522415_Tamil_News_Vellore-News-Study-on-security-in-tense-polling-stations_SECVPF.gif)
X
வேலூர்கொணவட்டம் அரசு பள்ளியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி இன்று ஆய்வு செய்தார்
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு
By
மாலை மலர்16 Feb 2022 8:50 AM GMT (Updated: 16 Feb 2022 8:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேலூர் மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் படுகிறது. இதுதவிர 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
வேலூரில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆய்வு செய்தார்.
இந்த வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அதனைப் பார்வையிட்டார்.மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)