search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
    X
    பிரசாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

    பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் ஊழலின்றி திட்டங்கள் நிறைவேற்றப்படும் - அண்ணாமலை பேச்சு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் ஊழலின்றி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மயிலாடுதுறையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
    கூட்டத்தில், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசியதாவது.

    தமிழகத்துக்கு கூடுதலாக மருத்துவ சீட் கிடைத்துள்ளன. நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
     
    நகராட்சி, பேரூராட்சி களுக்கு வரும் நிதியில் 85 சதவீதம் மத்திய அரசின் நிதி, மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் உள்ளாட்சி மூலமாகத்தான் மக்களை வந்தடைகின்றன. 

    பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் திட்டங்கள் ஊழல் இல்லாமல் நேரடியாக மக்களை வந்தடையும். சட்டசபை தேர்தலின் போது 517 வாக்குறுதிகளை அளித்த தி.மு.க. 7 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் சுகாதாரமாக இல்லை.

    மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறியுள்ளது. 
    தனியார் மருத்துவக் கல்லூரி சேர்க்கை குறைந்துள்ளது. 

    இதனால் நீட் தேர்வை தி.மு.க எதிர்க்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்துக்கு 1650 கூடுதலாக சீட் கிடைத்துள்ளது.
    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×