என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கோவையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    நகையை பறித்த வாலிபரை தேடி வருகின்றனர்.
    கோவையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு 
    நகையை பறித்த வாலிபரை தேடி வருகின்றனர்.
    கோவை, 
    கோவை சரவணம் பட்டியை அடுத்த சிவானந் தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி கலாவதி (66). இவர் தினமும் காலை நடைபயிற்சி செல்வது வழக்கம்.
     
    இந்நிலையில் சம்பவத்தன்று காலை கலாவதி வழக்கம் போல தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுடன் சத்தி மெயின் ரோட்டில் நடைபயிற்சி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் கலாவதியின் அருகில் வந்தனர். அவர்கள் திடீரென கலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்  சென்றனர்.  இதுகுறித்து கலாவதி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். 
    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு  செய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×