என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகர் கிராம பகுதியில் ஆதார் கார்டு கிடைக்காமல் மக்கள் கடும் அவதி
கடலூர்:
கடலூர் மாவட்ட அஞ்சலக தலைமை அலுவலகத்தில் அஞ்சல் துறை துணைக் கோட்டக் கண்காணிப்பாளரிடம் கடலூர் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ராம முத்துக்குமரனார் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் மக்கள் திட்டம் அனைத்தும் இந்திய அஞ்சல் துறை மூலமாக சிறப்பாக நடைப்பெற்று வருகிறது கடலூர் முதுநகர் சங்கர நாயுடு தெருவில் உள்ள துணை அஞ்சலகத்தில் பல ஆண்டுகளாக புதிய ஆதார் கார்டு எடுத்தல் மற்றும் ஆதார் கார்டு முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், மொபைல் எண் மாற்றம் என ஆதார் கார்டு சம்பந்தமான அனைத்து பணிகளும் நடைப்பெற்று வந்தது.
தற்போது ஓராண்டு காலமாக கொரோனோ தொற்று நோய் காரணம் காட்டி ஆதார் கார்டு சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தில் நடைபெற வில்லை. இங்கு வரும் பொது மக்களை கடலூர் தலைமை அஞ்சலகம் செல்லுங்கள். அங்குதான் ஆதார் கார்டு புதிதாக எடுக்க முடியும்.
ஆதார் கார்டு சம்பந்தபட்ட எல்லா பணிகளும் தலைமை அஞ்சலகத்தில் தான் நடைபெறுகிறது என்று பொதுமக்களை திருப்பி அனுப்புகிறார்கள். சுமார் 20 கிராம மக்கள் இந்த கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தின் மூலம் பயன் பெற்று வந்தார்கள்.
தற்போது பொதுமக்கள் மன உளைச்சலால் 5 கி.மீ தூரம் தாண்டி உள்ள கடலூர் தலைமை அஞ்சலகம் செல்ல வேண்டிஇருக்கிறது.
எனவே பொது மக்களின் நலன் கருதி உடனடியாய் கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தில் ஆதார் கார்டு புதிதாக எடுத்தல் மற்றும் அனைத்து ஆதார் கார்டு பணிகள் நடை பெற ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனுவின் நகல் சென்னை , திருச்சி அஞ்சல் துறை உயர் அதிகாரிகளுக்கும் அஞ்சலக விரைவு பதிவு தபாலில் அனுப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், சங்கத்தின் நல்வாழ்வு இயக்குனர் முனுசாமி, நதி அறக்கட்டளை செயலாளர் திருமாறன், இக்னைட் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ஜோஸ் மகேஷ் கலந்து கொண்டனர்.






