என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
    X
    வேலூர் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    வேலூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

    வேலூர் சத்துவாச்சாரியில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தலை ஒட்டி பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

    சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் இன்று காலை பறக்கும் படை அதிகாரி செரீப் என்பவர் தலைமையில் சோதனை நடத்தினர்.

    அப்போது தனியார் டிக்கெட் ஏஜென்சி யில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர் பைக்கில் வந்தார். அவரிடம் சோதனை நடத்தியதில் ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் இருந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    உரிய ஆவணங்கள் காட்டினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×