என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லந்தேரியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

    லந்தேரி அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள குக்கல பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 75). இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் மணி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இன்று காலை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

    இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மணி அளவில் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மணி எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×