என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தேன்கனிக்கோட்டையில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
தேன்கனிக்கோட்டையில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்தவர் மாதேஷ். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் பட்டியலில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆடு காணாததை கண்டு அதிர்ச்சி அடைந் தார். இரவு மர்ம நபர்கள் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து மாதேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தேன்கனி கோட்டை அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (வயது22), வெங்கடேஷ் மகன் ரஞ்சித் குமார் (21) ஆகிய இருவரும் சேர்ந்து ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Next Story






