என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பேரிகை அருகே சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காததால் வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது

    சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காததால் வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை அருகே நிலிவங்கா பகுதியில் ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உங்கட்டியை சேர்ந்த சிவா (வயது25), பொன்னாகரம் சேர்ந்த கூலி தொழிலாளி நரசிம்மா (25) ஆகிய நண்பர்களான இருவரும் நேற்றுமுன்தினம் நேற்று முன்தினம் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

    அப்போது சாப்பிட்ட பின்பு சிவா, நரசிமாவிடம் சாப்பிட்டதற்கு பணம் கொடு என்றார். இதனால் இருவருக்கும் தகராறு எற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மா அருகிள் இருந்த பாட்டிலை எடுத்து சிவாவை தாக்கினார். 

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    இது குறித்து பேரிகை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நரசிம்மாவை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×