என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான 66 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக கண்காணிக்கப்படுகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான 66 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள் உட்பட 8 நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    171 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், தற்போது 170 பதவிகளுக்கு 827 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 957 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி ஓசூர் மாநகராட்சியில் 47, கிருஷ்ணகிரி நகராட்சியில் 12, பேரூராட்சிகளில் நாகோஜனஹள்ளி 4, ஊத்தங்கரையில் 3  பதற்றமான வாக்குச் சாவடிகள் ஆகும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×