என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் மருங்கூரணி  தார் சாலையை படத்தில் காணலாம்.
    X
    குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் மருங்கூரணி தார் சாலையை படத்தில் காணலாம்.

    பழுதான சாலை சீரமைக்கப்படுமா?

    கந்தர்வகோட்டையில் பழுதான சாலையை சீரமைக்ககோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சியில் சுந்தம்பட்டி, மருங்கூரணி, கருப்பட்டி, ஆயிப்பட்டி வழியாக துவார் செல்லும் தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    மேலும் பள்ளி மாணவர்கள்,  பாதசாரிகள் மற்றும்  மோட்டார் சைக்கிளிலில் இந்த சாலை வழியாக செல் பவர்கள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில்  சிக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

    எனவே இந்த  சாலையை உடனடியாக  சீரமைக்க வேண்டும்  என்று பள்ளி மாணவர்கள்,  பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×