என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    புறநகர் ரெயில் சேவை 658 ஆக அதிகரிப்பு: ரெயிலுக்காக இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை

    புறநகர் மின்சார ரெயில்களில் அனைத்து பயணிகளும் பிப்.1 -ந் தேதி முதல் மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரெயில் சேவையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து இந்த நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.

    இதனால் புறநகர் ரெயில் பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதிக்ப்பட்டனர். மேலும் பயணிகள் பயணம் செய்ய நேரக்கட்டுப்பாடு, ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் சேவைகள் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இதற்கிடையே தற்போது கெரோனா நோய்த்தொற்று குறைந்துவதுவதை தொடர்ந்து ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய இருந்த கட்டுப்பாடுகளும படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது.

    புறநகர் மின்சார ரெயில்களில் அனைத்து பயணிகளும் பிப்.1 -ந் தேதி முதல் மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரெயில் சேவையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், கெரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்டதைப் போல், இன்று முதல் மீண்டும் புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

    திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 74 சேவைகளும், சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 84 சேவைகளும், சென்னை- கடற்கரைவே ளச்சேரி மார்க்கத்தில் 80 சேவைகளும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 240 சேவைகளும் என மொத்தம் 658 நடையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.

    சென்னையில் புறநகர் ரெயில் சேவை வழக்கமான நேரங்களில் இயக்கப்படுவதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.

    மேலும் அதிக அளவு ரெயில் சேவை உள்ளதால் மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலும் இன்று குறைந்து காணப்பட்டது. ரெயில் சேவை அதிகரித்து இருப்பதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக ரெயில் பயணி படப்பையை சேர்ந்த செம்பகவல்லி என்பவர் கூறியதாவது:-

    நான் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். தினமும் நான் பஸ் மூலம் தாம்பரம் வந்து தாம்பரத்தில் இருந்து ரெயில் மூலமாக தி.நகர் செல்வேன்.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரெயில் சேவை குறைக்கப்பட்டு இருந்தது. பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் ரெயிலுக்காக காத்திருக்கும் நிலை இருந்தது. எனவே நான் பஸ் மூலமாக தி.நகருக்கு சென்றேன். இதன் காரணமாக பயண நேரமும் கூடுதல் செலவும் ஏற்பட்டது.

    தற்போது வழக்கமான ரெயில் சேவைகள் விடப்பட்டுள்ளதால் ரெயிலுக்காக இனி நீண்ட நேரம் காதிருக்க வேண்டியது இல்லை. குறித்த நேரத்தில் செல்ல முடியும். எனவே நான் மீண்டும் மின்சார ரெயிலில் செல்கிறேன். ரெயில் சேவை அதிகரித்தது வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×