என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல்
Byமாலை மலர்12 Feb 2022 1:10 PM GMT (Updated: 12 Feb 2022 1:10 PM GMT)
தனியார் ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை பழைய ராமநாதபுரம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர் சேத்தூர் செல்வகுமார்(வயது 49).
இவர் பணியில் இருந்த போது 2 பேர் படுகாயமடைந்த வாலிபர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.
காயமடைந்தவர் குடிபோதையில் உள்ளார். எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள்’ என்று செல்வகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வகுமார் தாக்கப் பட்டார்.
தாக்குதல் சம்பவம் குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் சிகிச்சைக்கு வந்தவர் தென்னரசு என்பதும், அவரை அழைத்து வந்தது ஐராவதநல்லூர் ரவுடி ஆப்பாயில் ஆறுமுகம் மற்றும் கார்த்திக் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய ரவுடி உள்பட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X