என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    முன்மாதிரி கிராம விருது பெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் தகவல்

    மாநில அளவில் கிராம விருது பெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ்  சுகாதாரம் மற்றும் துப்புரவு தொடர்பான பணிகள் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
     
    சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசால், முன் மாதிரி கிராம விருது உருவாக்கப்பட்டு,  அதன் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் கேடயமும்,  மாவட்ட அளவில் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் கேடயமும், வழங்கப்படவுள்ளது.
     
    இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத் திலுள்ள  497 ஊராட்சி களிலும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டி விழிப் புணர்வு ஏற்படுத்த வட்டாரத்திற்கு 2 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 26 முன்மாதிரி நிறை செறிவு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இவ்வூராட்சிகளில் சமூக வரைபடம், மூன்று கட்ட கழிவு தணிக்கை, திடக்கழிவு மேலாண்மை கூடங்கள் மறுசீரமைப்பு, சாம்பல் நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை,  தூய தெருக்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறுகட்ட பணிகள் திட்டமிடப் பட்டு நடைபெற்று வருகின்றன. 


    எனவே, இந்த பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார் வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தில் முதற்பரிசினை பெறத்தக்க வகையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதுடன் பொதுமக்கள் தங்களின் வீட்டையும், சுற்றுப் புறத்தையும் குப்பைகள் சேரா வண்ணம் பராமரிக்கவும், சுகாதார பழக்க வழக்கங்களை மேற் கொள்ளவும், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.




     
    Next Story
    ×