search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
    X
    விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி

    விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி

    தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி 55. இவருக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சக்கரவர்த்தி தன்னுடைய நிலத்தை அளவீடு செய்வதற்காக விருதாச்சலம் நில அளவை பிரிவில் அளவீடு செய்து  தருமாறு மனு கொடுத்துள்ளார்.

    மேலும் அதற்கு உண்டான பணத்தையும் கட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து நில அளவையாளர்கள் நிலத்தை அளப்பதற்காக சென்றபோது அந்த தனிநபர்கள் தடுத்ததால் அவர்கள் நிலத்தை அளவீடு செய்யாமல் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தனிநபர்கள் சக்கரவர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடன்  அவரை போலீசார் சமாதானப்படுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய தாசில்தார் தனபதி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×