search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபாட்டில்கள் அழிப்பு
    X
    மதுபாட்டில்கள் அழிப்பு

    மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு

    விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2017, 2019, 2021-ம் ஆண்டுகளில் மதுவிலக்கு வழக்குகளில் மொத்தம் 6 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2017, 2019, 2021-ம் ஆண்டுகளில் மதுவிலக்கு வழக்குகளில் மொத்தம் 6 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். இந்த மதுபானங்களை அழிப்பதற்காக விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர். 

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்னிலையில் அந்த 6 ஆயிரம் மதுபாட்டில்களில் இருந்த மதுபானங்களும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டுகள் சிவமணி, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×