என் மலர்
உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம் தொடக்கம்
நீட் தேர்வை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
சீர்காழியில் நீட் தேர்வை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
சீர்காழி:
மாணவர்களின் நலனுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்பு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்வை ஆதரித்தும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் கடைவீதியில் இந்து மக்கள் கட்சியினர் பொது மக்களிடம் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து பெற்றனர். இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் இரா.மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்து பேசினார்.மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் நீ.தனசேகரன், மாவட்ட துணைசெயலாளர் செந்தில், விவசாய அணித்தலைவர் அய்யப்பன், ஒன்றிய துணை செயலாளர் அம்மன் சங்கர், பழையார் பாலா, அசோக், கண்ணன், பாரதிய ஜனதா மீனவரணி செயலாளர் ஸ்டாலின், தேவேந்திரகுல பாசறை அருளழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






