என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
முன்மாதிரி சிறப்பு விருது பெற அழைப்பு
முன்மாதிரி சிறப்பு விருது பெற விண்ணப்பிலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதா£வது:
திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவருக்கு திருநங்கையர் தினமான ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ம் தேதியன்று திருநங்கையருக் கான முன்மாதிரி சிறப்பு விருதான ரூ.1 லட்சம் (காசோலை) மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விருதை பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுடைய திருநங்கைள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக 04322&222270 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






