என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை கலெக்டர் அருண் தம்புராஜ்
    X
    நாகை கலெக்டர் அருண் தம்புராஜ்

    நாகையில் நாளை 22-வது மெகா தடுப்பூசி முகாம்

    நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு நாளை 12-ந்தேதி 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட முதல்வர் ஆணையின்படி 
    மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு 
    பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் நாளை காலை 9 மணி முதல் 
    மாலை 50 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனை, 
    ஆரம்ப சுகாதார நிலையங்கள்.துணை சுகாதார நிலையம் 
    மற்றும் 350 சிறப்பு முகாம்களில் 10,000 பேருக்கு தடுப்பூசி 
    செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா 
    தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் 
    நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி 
    போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    மேலும், விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை 
    தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து 
    தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் 13.5.21-க்கு முன் 2-வது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 
    60 வயதிற்கு மேற்பட்டு இணை நோய் உள்ளவர்கள், சுகாதார 
    பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் 
    அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு  
    அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×