என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
வேலூரில் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர், சைதாப்பேட்டை காந்தி ரோடு சந்திக்கும் மெயின் பஜார் சாலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சாலை அமைக்க நேற்று இரவு சந்திப்பின் 4 பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் வணிகர்களும், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.
இது குறித்து தகவலறித்த பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாசலம் தலைமை தாங்கினார்.
மணிகண்டன், மண்டல பொதுச் செயலாளர் ரவி, சிவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலை பணி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






